districts

img

திமுக முன்னாள் எம்எல்ஏ  க.சொ.கணேசன் நினைவு தினம்   அமைச்சர் பங்கேற்பு

அரியலூர், ஆக.22- ஜெயங்கொண்டம் மறைந்த முன்னாள் திமுக எம்எல்ஏ  க.சொ.கணேசன் 17-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ  க.சொ.க.கண்ணன் ஆகியோர் க.சொ.கணேசனின் சமாதி யில் மலர்வளையம் வைத்து அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.   நிகழ்ச்சியில், ஏராளமான கட்சி தொண்டர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தா.பழூரில் உள்ள  கணேசனின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து  மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

;