அரியலூர், நவ.5- அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே அணைக் குடம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக்கரையில் துணி துவைப்பதற்காக ஒரு கல் பல வருடங்களாக பயன் படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அந்த கல்லில் சில குறியீடுகள் உள்ளன. அதா வது அந்த கல்லின் ஒரு பகுதி யில் குத்துவிளக்கு போன்ற ஒரு குறியீடும், அதன் அரு கில் மற்றொரு குறியீடும் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த கல்லின் பின்பகுதி யில் ஏதோ ஒரு குறியீடு செதுக்கப்பட்டிருந்தது போன்றும், ஆனால் சரியாக புலப்படாத வகையிலும் உள் ளது. மன்னர்கள் ஆண்ட காலத்தில் படைப்பிரிவைச் சேர்ந்த யானைகளை பரா மரிப்பதற்கான கிராமமாக அணைக்குடம் இருந்தது. யானைகளின் கூடமாக இருந்ததால் ஆணைக்கூடம் என்ற பெயருடன் விளங்கி யது. பிற்காலத்தில் அந்த பெயர் மருவி அணைக்குடம் என்று தற்போது அழைக் கப்படுவதாக அப்பகுதி யைச் சேர்ந்த முதியவர்கள் கூறுகின்றனர். யானைகள் பராமரிக்கப் படும் இடம், கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டு முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சி செய்தபோது குதிரை லாயமாக பயன்படுத்தப் பட்ட அமைப்புகள் அணைக் குடம் கிராமம் அருகில் உள்ள சோழமாதேவி கிராமத்தில் தற்போதும் உள்ளன.
எனவே அணைக்குடம் கிரா மம் சோழர்கள் காலத்தில் யானைகள் பராமரிக்கப் படும் இடமாகவும், அந்த கால அரசுகளோடு தொடர் பில் இருந்த கிராமமாக அல்லது நகரமாக இருந்தி ருக்கலாம் என்றும் வரலாற்று ஆர்வலர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் ஏரிக்கரை யில் வரலாற்று குறியீடுகளு டன் உள்ள கல் குறித்து தொல்லியல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “சங்க காலம் முதலே கற்க ளில் குறியீடுகள் பொறித்து வரலாறுகளை பதிவு செய் யும் முறையை தமிழர்கள் கடைபிடித்து வருகிறார்கள். முற்கால சோழர்கள், பாண்டி யர்கள், பல்லவர்கள், பிற் கால சோழர்கள், நாயக்கர் கள் காலம் வரை எந்த ஆட்சிக் காலத்திலும் அந்த கல்லில் குறியீடுகள் உரு வாக்கப்பட்டிருக்கலாம். அவற்றை ஆய்வு செய்ய வேண்டும். நேரடியாக அர சர்களோடு தொடர்புடைய அடையாள கல்லாக இல் லையென்றாலும், மன்னர் கள் காலத்தில் கோவில் களுக்கு நிலங்களை நிவந் தம் அளித்த வணிகர்கள், அமைச்சர்கள், பிரபுக்கள், நிலச்சுவாந்தார்கள் உள் ளிட்டவர்களில் ஒருவரு டைய அடையாள கல்லாக வும் இந்த கல் இருக்கலாம். எனவே அந்த கல்லில் உள்ள குறியீடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டால், இப்பகுதியில் பல்வேறு வர லாற்று சுவடுகளை கண்டு பிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது” என்றார். அந்த கல்லை பத்திரப் படுத்த வேண்டும். அதில் உள்ள குறியீடுகள் குறித்து வரலாற்று ஆய்வாளர் களும், தொல்லியல் துறை யினரும் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் வர லாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.