districts

img

பழுதான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வீணாகும் குடிநீர்: சரிசெய்ய கோரிக்கை

அரியலூர், நவ.11 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே  உள்ள தா.பழூர் ஒன்றியத் திற்கு உட்பட்ட முதல்நிலை ஊராட்சியில் உள்ளது தாதம் பேட்டை கிராமம். இந்த கிரா மத்தில் காலனி தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்  தேக்க தொட்டி சுமார் 30 ஆயி ரம் லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும். இதன் மூலம் சுமார் 300-க்கும் மேற் பட்ட குடும்பங்கள் பயன டைந்து வருகின்றன. இந் நிலையில் கடந்த 6 மாதங்க ளுக்கு முன்பு தொட்டியில் ஆங்காங்கே விரிசல் ஏற் பட்டு தண்ணீர் வெளியாகி வருகிறது.  இதனால் தண்ணீரை தேக்கி வைத்து உபயோகப் படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நட வடிக்கையும் இல்லை என பொதுமக்கள் புகார் தெரி வித்துள்ளனர்.  எனவே மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியில் ஏற்பட்ட விரிசல் களை சரி செய்து தூய்மைப் படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.