அரியலூர், டிச.7- அரியலூர் மாவட்டத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் கனமழை அல்லது அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ள தாக வானிலை ஆய்வு மையம் அறிவித் துள்ளது. இதனால், அரியலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 29 பதற்றமான பகுதி களை கண்காணிக்க, துணை ஆட்சியர் தலை மையில் பல்துறையைச் சார்ந்த 12 அலுவலர் களைக் கொண்டு, 5 குழுக்களாக மண்டல கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி குழுக்கள் பதற்றமான பகுதிகளை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து, தேவையான முன்னெச்சரிக்கை, மீட்பு நடவடிக்கைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க வசதியாக 39 நிவாரண மையங் கள் அடிப்படை வசதிகளுடன் தயார் நிலை யில் வைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள 28 ரேசன் கடைகளில் பொது விநியோகத் திட்ட உணவுப் பொருட் கள் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன. கனமழையின் போது பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். கால்நடைகளை பலவீனமாக மற்றும் விழ வாய்ப்புள்ள சுவர்கள் மற்றும் கட்டிடங்களை தவிர்த்து பாதுகாப்பான இடங்களில் கட்டி வைக்க வேண்டும். மழை பாதிப்பு குறித்து, ஆட்சியர் அலுவ லகத்தில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய கட்டணமில்லா தொலைபேசி எண்-1077 மற்றும் 04329 - 228709 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க லாம் என ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தெரி வித்துள்ளார்.