districts

img

தடகளப் போட்டியில் சாதிக்கும் சாலைப் பணியாளரின் மகள் தரமான ‘ஷூ’ கூட இல்லை: அரசு உதவி செய்ய வேண்டுகோள்

அரியலூர், டிச.7- அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதி யைச் சேர்ந்தவர் தங்கம்  (20). இவர் சென்னையில்  உள்ள தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யுனிவர்சிட்டி யில் 3 ஆம்‌ ஆண்டு படித்து  வருகிறார். இவரது தந்தை கலிய பெருமாள் ஜெயங்கொண் டம் பகுதியில் சாலைப் பணி யாளராக வேலை செய்து வருகிறார். தாய் மலர்கொடி கூலி வேலை செய்கிறார். இவர்களுக்கு கனிமொழி, தங்கம், உஷாராணி என்ற 3 மகள்களும், கண்ணதாசன் என்ற மகனும் உள்ளனர். மகன் படிக்காத நிலையில், 3 மகள்களையும் படிக்க வைத்து வருகின்றனர். மாணவி தங்கம், சிறு  வயதிலிருந்தே பேச்சு, கட்டுரை மற்றும் தடகளம்  உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று, பரிசுகள், பதக்கங் கள், சான்றிதழ்களைப் பெற் றுள்ளார். 12 ஆம் வகுப்பு வரை உடையார்பாளையம் அரசுப் பள்ளியில் படித்த இவர், படிப்புடன் இணை செயல்பாடுகளிலும் சிறந்து  விளங்கியதற்காக காமரா ஜர் விருதும் பெற்றுள்ளார். அண்மையில், ஆசியா அளவிலான தடகளப் போட்டி கேரள மாநிலம் திரு வனந்தபுரத்தில் நடைபெற் றது. இதில் 51 நாடுகளை  சேர்ந்த வீரர், வீராங்கனை கள் கலந்து கொண்டனர். இதில் 22 கி.மீட்டர் தடகள போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கத்தை வென் றார். இதன் மூலம் இவர்  உலக அளவிலான தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றுள் ளார். இதுகுறித்து தங்கப் பதக்கம் வென்ற தங்கம் கூறுகையில், தனது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளது. சாலைப் பணியாளராக உள்ள எனது தந்தை மற்றும் கூலி வேலை  பார்க்கக் கூடிய எனது தாய்  3 பெண் குழந்தைகளையும் மிகவும் சிரமப்பட்டு படிக்க வைத்து வருகின்றனர். என்னால் ஒரு தரமான ஷூ  (காலணி) கூட வாங்க முடி யாத நிலையில், பயிற்சி யாளரின் ஆதரவோடு போட்டிகளில் கலந்து கொள் கிறேன். தற்போது ஆசிய அளவில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு  தங்கப் பதக்கம் வென்றுள் ளேன். கூடுதல் பயிற்சியும் உபகரணங்களும் எனக்கு கிடைத்தால் பல்வேறு வெற்றிகளை பெறுவேன். தமிழக அரசு எனக்கு உதவி  செய்ய வேண்டும்” என கோரியுள்ளார்.