districts

img

அனுமதியின்றி இயங்கும் பட்டாசு ஆலைகளுக்கு வேதிப்பொருட்கள் சப்ளை செய்யக் கூடாது விருதுநகர் எஸ்.பி எச்சரிக்கை

விருதுநகர், ஜூன் 1- அனுமதியின்றி செயல்படும் பட்டாசு ஆலைகளுக்கு வேதிப்பொருள் விநியோ கம் செய்யும் நிறுவனங்களின் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளுக்கு பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவன  உரிமையாளர்களுக்கான கூட்டம் மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட  விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் மனோகர் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் 1052 பட்டாசு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின் றன. கடந்த 2012 முதல் தற்போது வரை 156  விபத்துகள் நடைபெற்றுள்ளது. இதில் 174 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 305 பேர் காயமடைந்துள்ளனர். இதனால் மாநில அரசு பட்டாசு தயா ரிக்கும் தொழிற்சாலைகளை தொடர்ந்து கண்காணிப்பதற்கும் சரியான உரிமங்கள் மூலம் நடத்தப்படுகிறதா, விதி முறைகள் பின்பற்றப்படுகிறதா என குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டது. மேலும், பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்கான முன்  னெச்சரிக்கை ஏற்பாடுகளும் விதிமுறை களை விளக்கும் கருத்தரங்குகளும் நடத்  தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இக்கூட் டம் நடைபெறுகிறது. எனவே, அனுமதியின்றி செயல்படும் பட்டாசு ஆலைகளுக்கு யாரும் வேதிப் பொருட்களை விநியோகம் செய்யக் கூடாது. அவ்வாறு மீறி விநியோகம் செய்யும் நிறுவனத்தின் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில், பல்வேறு வேதிப் பொருள் நிறு வனங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.