வேலூர் நவ 26 - அகில இந்திய காப்பீட்டு கழக ஊழியர்கள் சங்கத்தின் புனர மைக்கப்பட்ட சரோஜ் இல்ல திறப்பு விழா, மூத்த தலைவர் தோழர் எஸ்.ராஜப்பா படத் திறப்பு, தென் மண்டல மாநாட்டு மலர் வெளியீடு, தென் மண்டல மாநாட்டுத் தொண்டர்களுக்கு பாராட்டு தென் மண்டல மாநாட்டு வரவேற்புக் குழு நிறைவு என ஐம்பெரும் விழா வேலூரில் நடை பெற்றது. கோட்டத் தலைவர் எஸ்.பழனி ராஜ் தலைமை தாங்கினார். தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழி யர் கூட்டமைப்பின் பொதுச்செய லாளர் டி.செந்தில்குமார் சரோஜ் இல்லத்தை திறந்து வைத்து, மாநாட்டில் பணியாற்றியவர்களை பாராட்டினார். தென்மண்டல இன்சூ ரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் கே.சுவாமிநாதன் மறைந்த மூத்த தலைவர் எஸ்.ராஜப்பா படத்தை திறந்து வைத்தார். மாநாட்டு மலரை கூட்ட மைப்பின் பொருளாளர் எஸ்.சிவசுப்பிரமணியன் வெளியிட ஓய்வூதியர் சங்க கோட்டத் தலை வர் ஆர்.கேசவன் பெற்றுக் கொண்டார். இணைச்செயலாளர் எஸ்.ரமேஷ்குமார், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.சக்தி வேல், மாநகர தொழிற்சங்க கூட்ட மைப்பு கன்வீனர் சி.ஞானசேகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக கோட்டப் பொதுச் செயலாளர் எஸ்.ராமன் வரவேற்றார். கோட்ட துணைத்தலைவர் எஸ்.குணாளன் நன்றி கூறினார்.