வேலூர், மார்ச் 29- வேலூர் மாவட்டம் காட்பாடி கசம் பகுதியில் தனியார் பள்ளி விடுதி உள்ளது. இங்கு 52 மாணவர்கள் தங்கியுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை உணவு சாப்பிட்ட பிறகு மாணவர்கள் 2 பேருக்கு திடீரென வயிற்றுப் போக்கு, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்களை மீட்டு பள்ளிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாங்காய் மற்றும் புளி சாதம் சாப்பிடுவதன் காரணமாக மாணவர்களுக்கு வயிற்றுப்போக்கு மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விடுதியில் உள்ள மாணவர்களை கண்காணித்து வருகின்றனர்.