மயிலாடுதுறை, மார்ச் 9- மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் சர்வதேச பெண்கள் தின விழா ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் நந்தினிஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலெட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினர் துளசிரேகா ரமேஷ், செய்தி வாசிப்பா ளர் தாட்சாயினி மற்றும் பெண் ஊராட்சி தலைவர்கள், மாவட்ட, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், பணித்தள மேற்பார் வையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பொன்னமராவதி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றி யம் திருக்களம்பூர் அண்ணா நகர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் ஊராட்சி மன்றத் தலைவர் ராமாயி முன்னிலையில் நடைபெற்ற விழாவில் தலைமை ஆசி ரியர் கவிதா தலைமை வகித்தார்.