districts

போக்குவரத்து ஓய்வு பெற்றோர் மாநில நிர்வாகக்குழு கூட்டம்

திருச்சிராப்பள்ளி, நவ.26- தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் சனிக்கிழமை திருச்சி வெண்மணி இல்லத் தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர்கள், ரைமண்ட், சந்திரன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாநில மைய நிர்வாகி வீரராகவன், மாநில பொதுச் செயலாளர் ஹர்ஷன் ஆகி யோர் பேசினர். மாநில துணை பொதுச்செயலாளர் தேவராஜ் வரவேற்றார். மாநி லத் துணைத் தலைவர் சின்னசாமி நன்றி கூறினார். கூட்டத்தில் டி.ஏ. வழக் கில் கொடுத்த தீர்ப்பினை  அரசும், கழக அதிகாரி களும் முறையாக அமல்ப டுத்தாமல் 80,000 ஓய்வூதி யர்களுக்கு துரோகம் செய்து விட்டனர். எனவே  அரசுக்கு  நிர்ப்பந்தம் கொடுக்கும் வகையில் மண்டல வாரியாக  வால்போஸ்டர் இயக்கம் நடத்துவது. ஒரு லட்சம் பொதுமக்களை சந்தித்து நோட்டீஸ் கொடுப்பது. டிசம்பர் 29 ஆம் தேதிக்குள் தீர்வு எட்டப்படவில்லை என்றால், ஓய்வூதியர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்களை ஒன்று திரட்டி மாநிலம் தழுவிய மறி யல் போராட்டம் நடத்து வது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.  கூட்டத்தில், மாநில துணை பொதுச் செயலா ளர்கள் செல்வராஜ், தேவ ராஜ், சண்முகம், பொருளா ளர் வரதராஜன் உள்பட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.