மயிலாடுதுறை, டிச.21 - மயிலாடுதுறை மாவட் டம் முழுவதும் பல்வேறு மக் கள் பிரச்சனைகளை வலி யுறுத்தி நடைபெற்று வரும் நடைபயணத்தின் 5 ஆவது நாளான புதனன்று தரங்கம் பாடி வட்டத்திற்குட்பட்ட அர சூர் பகுதியில் துவங்கியது. இப்பயணம், அரசூர், கொடைவிளாகம், வதிஸ் டாச்சேரி, நீலவெளி, வேலம் புதுக்குடி, கொத்தங்குடி, அரும்பாக்கம், நல்லாடை, பனங்குடி, நல்லாடை, முக் கூட்டு வழியாக திருவிளை யாட்டம், கடலி, மேமாத்தூர், பரசலூர், செம்பனார்கோவி லில் நிறைவடைந்தது. பய ணத்திற்கு அரசூர் பகுதி யில் தரங்கம்பாடி ஒன்றியக் குழு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக விவசாய அணி மாநில இணை செயலாள ரும், முன்னாள் எம்.எல்.ஏ வுமான அருட்செல்வன் பய ணக் குழு தலைவரும், சிபிஎம் மாவட்டச் செயலாளருமான பி.சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தி, நடை பயணத்தில் கலந்து கொண் டார். அரும்பாக்கம் கடை வீதியில் கொத்தங்குடி கிளை சார்பில் ரூபாய் நோட்டு களால் ஆன மாலைகளை அணிவித்து மதிய உணவு மற்றும் நிதி வழங்கினர். திருவிளையாட்டம் கிராமத் தில் பட்டாசுகள் முழங்க வர வேற்றனர். பின்னர் சௌரி ராசன் நகர் பகுதியில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சியும் தெருமுனைக் கூட்டமும் நடைபெற்றது.
பெரம்பூரில் பொதுக்கூட்டம்
இந்த நடைபயணத்தை யொட்டி குத்தாலம் ஒன்றி யம், பெரம்பூர் கடைவீதியில் பிரச்சார விளக்க பொதுக் கூட்டம் ஒன்றிய செயலா ளர் சி.விஜயகாந்த் தலை மையில் நடைபெற்றது. கட்சி யின் மாநிலக் குழு உறுப்பி னரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.மாரி முத்து சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டா லின், எஸ்.துரைராஜ், டி.சிம் சன், ப.மாரியப்பன், ஜி. வெண்ணிலா உள்ளிட்டோர் உரையாற்றினர்.