districts

img

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மணப்பாறை 14-வது வட்ட மாநாடு

திருச்சிராப்பள்ளி, ஜூலை 13 -  திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க 14 வது வட்ட மாநாடு பண்ணாங்கொம்பில் நடை பெற்றது. சீனிவாசன் தலைமை வகித்தார்.    பிச்சைக்கண்ணு வரவேற்றார். மாநாட்டு  கொடியை மூத்த தோழர் ராஜகோபால் ஏற்றி னார்.  மாநாட்டில் தஞ்சை மாவட்டத் தலை வர் செந்தில்குமார் துவக்கவுரையாற்றினார். மாவட்ட தலைவர் ராமநாதன், சிபிஎம் வட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க வட்டச் செயலாளர் கண்ணன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.  மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். வட்டக் குழு தலைவராக பிச்சைக்கண்ணு, செயலாளராக சீனிவா சன், பொருளாளராக பெரியசாமி, துணைத்  தலைவர்களாக ராஜகோபால், குழந்தை வேல், துணை செயலாளர்களாக அந்தோணி சாமி, ஜான்பிரிட்டோ உள்பட 17 பேர்  கொண்ட வட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது.  மாவட்ட செயலாளர் சிதம்பரம் நிறைவுரை யாற்றினார். பொருளாளர் பெரியசாமி நன்றி  கூறினார்.