திருச்சிராப்பள்ளி, ஜன.24- ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்தியதை ரத்து செய்ய வேண்டும். வாகன ஓட்டுநர்களிடம் வழிப்பறி போல் ஆன்-லைன் மூலம் மிக அதிகமான அபராதத்தை விதித்து கட்டண கொள்ளையில் ஈடுபடுவதை கைவிட வேண்டும். வீட்டில் நிற்கும் வாகனங்க ளுக்கும் ஆன்-லைன் அபராதம் விதிப் பதை கண்டித்து சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் ஸ்ரீரங்கம் பகுதிக்குழு சார்பில் செவ்வாயன்று ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் சுப்ரமணியன் தலைமையில் போராட்டம் நடைபெறும் என அறிவிக் கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீரங்கம் காவல் நிலை யத்தில், உதவி ஆணையர் நிவேதா லெட்சுமி தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்க ராஜன், சாலை போக்குவரத்து சங்க மாவட் டச் செயலாளர் சந்திரன், மாவட்டப் பொரு ளாளர் சுரேஷ், மாவட்ட தலைவர் வீர முத்து, சிபிஎம் பகுதி செயலாளர் தர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில், ஆன்-லைன் மூலம் அபராதம் விதிப்பதில் உள்ள குளறு படிகள் சரிசெய்யப்படும் என உறுதி யளிக்கப்பட்டது. இதையடுத்து போராட் டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.