districts

img

விலைவாசியை கட்டுப்படுத்தக் கோரி மாதர் சங்கம் நூதன போராட்டம்

திருவாரூர், அக்.24-  கடுமையாக உயர்ந்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், ரேசன் கடைகளில் மாநிலங்க ளுக்கு வழங்க வேண்டிய உணவு தானியங்களை முறையாக வழங்கக்கோரி யும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசாங் கம் ரேசன் கடைகளில் ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் அத்தியாவசியப் பொருட்களை மலிவு விலை யில் வழங்கிட வலியுறுத்தியம் நூதன போராட்டம் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக நடைபெற்றது. குடவாசலில் வி.பிசிந்தன் பேருந்து நிலையம் அருகே, சங்கத்தின் குடவாசல் நகரம் மற்றும் ஒன்றியம் சார்பாக நடைபெற்ற நூதன போரா ட்டத்திற்கு, மாவட்டச் செய லாளர் பா.கோமதி தலைமை வகித்தார், ஒன்றியச் செய லாளர் கே.ஜெகதீஸ்வரி, நகரச் செயலாளர் டி.ஜி.தமிழ்செல்வி ஆகியோர் முன் னிலை வகித்தனர் தலைவர் பா.பமிதா உள்ளிட்ட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  நீடாமங்கலத்தில் நடந்த போராட்டத்திற்கு மாவட்டப் பொருளாளர் ஆர்.சுமதி தலைமை ஏற்றார். போராட் டத்தில் கலந்து கொண்ட பெண்கள் விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டி கண்டன கோஷம் எழுப்பினர்.