districts

img

சீர்காழி சுற்று வட்டாரப் பகுதிகளில் மெல்ல... மெல்ல.. நிலைமை சீரடைகிறது

சீர்காழி. நவ. 17 மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளி டம் அருகே மழை-வெள்ளத்தால் பாதிக்கப்  பட்ட  வேட்டங்குடி, வேம்படி, இருவக்  கொல்லை, கேவரோடை, வாடி, வெள்ள குளம், கூழையார், குமரக்கோட்டம், ஜீவா நகர், புளியந்துறை உள்ளிட்ட பகுதிகளை சுற்றுச்சூழல் இளைஞர் நலம் மற்றும் விளை யாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்.  வேம்படி கிராமத்திற்குச் சென்ற  அவர் மக்களின் குறைகளைக் கேட்ட றிந்தார்.  அப்போது மக்கள், சொந்தமாக மனைப் பட்டா இல்லாமல் 60 குடும்பங் கள் இருப்பதாகத் தெரிவித்தனர். இதை யடுத்து  அமைச்சர் வருவாய்த் துறை அதிகாரி களிடம் 15 நாட்களில் 60 குடும்பத்தினருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். வேம்படி கிரா மத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வாழும் பகுதிக்கு சுதந்திரம் அடைந்த காலத்திலி ருந்து சாலை வசதி இல்லை எனக் கூறினர். அமைச்சர் உடனடியாக சம்மந்தப்பட்ட பகு திக்கு சாலை வசதி ஏற்படுத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். வேட்டங்குடி, இருவகொல்லை பகுதி யில் மழை-  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடி யிருப்பில் உள்ள மக்களை சந்தித்து  அமைச்  சர் ஆறுதல் கூறினார்.

 சாலைகளில் தண்ணீர் வடியாமல் தேங்கியுள்ளதால் டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனத்திலும் அமைச்சர் குடியிருப்புகளை  ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், வடகிழக்குப் பருவ மழை 11-ஆம் தேதி கனமழையாக பெய்தது.  இதனால் சீர்காழி,கொள்ளிடம், செம்ப னார்கோவில் ஆகிய இடங்களில் அதிகபட்ச மாக 44 சென்டிமீட்டர் மழை பெய்தது.  கொள்ளிடம் ஒன்றியத்தின் கிழக்குப் பகுதி, சீர்காழி ஒன்றியத்தின் கிழக்குப் பகுதி, கடற்கரையோர கிராமங்களில் இன்னும் தண்ணீர் சூழ்ந்து இருக்கிறது. மக்கள்  முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால்  பள்ளிகள் திறக்க முடியாத நிலையில் அங்கு மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மெல்ல... மெல்ல... இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. மாவட்டத்தில் 34,852 ஹெக்டேர் பயிர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. கொள்ளிடத்தில் 10,000 ஹெக்டேர், சீர்காழியில் 10,500 ஹெக்டேர், செம்பனார்கோயிலில் 9552 ஹெக்டேர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி யுள்ளது என்றார். அமைச்சருடன் சீர்காழி  தொகுதி  சட்ட மன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வந்திருந்தனர்.