மயிலாடுதுறை, மே 27 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அலுவ லகத்தில் உள்ள 70 வருவாய் கிராமங்களுக்கான கணக்கு கள் முடித்தல் மற்றும் பொதுமக்களிடம் மனுக்கள் பெறுவதற் கான ஜமாபந்தி கடந்த மே 17 அன்று சீர்காழி கோட்டாட்சி யர் நாராயணன் தலைமையில் துவங்கியது. தினமும் 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் மனுக்களும் அந்த கிராமம் தொடர்பான கணக்குகளும் முடித்து வைக்கப்பட்டன. ஜமாபந்தியில் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைபட்டா, பட்டாமாறுதல், திருமண உதவித்தொகை தொடர்பாக 427 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டன.