districts

img

யமஹா நிறுவன தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, அக்.19 - யமஹா நிறுவனத்தில் பணியாற்றும் தொழி லாளர்கள் மீதான விரோதப் போக்கை கண்டித்தும், போட்டி சங்கங்களை உருவாக்கி  அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை புறக் கணித்துவிட்டு நிர்வாகத்திற்கு ஆதரவாக நிர்வா கமே உருவாக்கிய சங்கங்களை அழைத்து  ஊதியம் மற்றும் போனஸ் பேச்சுவார்த்தை நடத்துவதை கைவிட வேண்டும். அங்கீகரிக் கப்பட்ட சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் என  வலியுறுத்தி 10 ஆது நாளாக நடந்து வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவாகவும், தமிழக  அரசாங்கமும் தொழில்துறையும் யமஹா தொழி லாளர்களின் கோரிக்கைகளை பரிசளித்து தீர்வு காண கோரியும் மாநில முழுவதும் யமஹா  நிறுவனம் முன்பு சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. மயிலாடுதுறையில் நடைபெற்ற போராட்டத் திற்கு மாவட்ட தலைவர் ஆர்.ரவீந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ப.மாரியப் பன், மாவட்ட துணைத்தலைவர் ஆர்.ராமானுஜம்,  ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வ.பழனிவேலு, விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.துரைராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
திருச்சிராப்பள்ளி
சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள யமஹா ஷோரூம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத்  தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் ரங்கராஜன், மாவட்ட  பொருளாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை, நட ராஜபுரம் யமஹா நிறுவன ஷோரூம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் துணைச் செயலாளர் கே.அன்பு தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் கண்டன உரையாற்றினார்.  இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாதர்  சங்கம் மாநிலச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி,  சிஐடியு மாவட்டப் பொருளாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், சிஐடியு நிர்வாகிகள், சிபிஎம் மாநகரச்  செயலாளர் எம்.வடிவேலன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் என்.குருசாமி, விரைவு போக்கு வரத்து சங்கம் மாநில துணைத் தலைவர் வெங்க டேசன், தரைக்கடை சங்க மாவட்ட தலைவர் மணி மாறன், அரசு போக்குவரத்து சங்கம் ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கரூர்
சிஐடியு கரூர் மாவட்ட குழு சார்பில் கரூர் -  சேலம் சாலையில் உள்ள யமஹா ஷோரூம்  முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டப் பொருளா ளர் ப.சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட செய லாளர் சி.முருகேசன் கண்டன உரையாற்றினார்.