districts

img

நிரந்தர பணியாளர்களை தனியார் மயமாக்கும் அரசாணை ரத்து கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருவாரூர், மார்ச் 29- திருவாரூர் மாவட்டத் தில் பல்வேறு இடங்களில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் மற்றும்  ஊழியர் சங்கம் (சிஐடியு),  நிரந்தர மற்றும் ஒப்பந்த  துப்புரவு தொழிலாளர்கள் சார்பில் நகராட்சி, மாநக ராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் நிரந்தர துப்புரவு பணியாளர்களை அழித்திடும் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. திருவாரூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே ஆர்.ராஜேந்திரன், எல்.உலகநாதன் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்  பாட்டத்தில் சிஐடியு மாவட்  டச் செயலாளர் டி.முருகை யன் உட்பட 50க்கும் மேற்  பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், நக ராட்சி, மாநகராட்சி, பேரூ ராட்சி, ஊராட்சி அலுவல கங்களில் நிரந்தர துப்புரவு  பணியாளர்களை அழித்தி டும் அரசாணை 152,10,139-ஐ ரத்து செய்ய வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்துவரும் ஒப் ப ந்த துப்புரவு தொழிலா ளர்களை தேர்தல் வாக்குறு தியின் படி நிரந்தரம் செய்ய  வேண்டும், காலிபணியிடங் களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன.