districts

img

மன்னார்குடியில் வெண்ணெய் தாழி திருவிழா: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

மன்னார்குடி, மார்ச் 26- திருவாரூர் மாவட்டம் மன்னார்  குடி ராஜகோபாலசாமி கோவில்  பங்குனி திருவிழாவில்   வெண்ணைத் தாழி திருவிழா ஞாயிறன்று நடை பெற்றது. ஒரு லட்சத்திற்கும் மேற்  பட்ட மக்கள் சுட்டெரிக்கும் வெயி லில் மன்னார்குடியில் குவிந்தனர்.  திருவிழாவில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த  சேர்ந்த  மன்னார்குடி சாகர்  சில்க் நிறுவனத்தின்  உரிமையாளர்  கள்  மற்றும் ஊழியர்கள் ஒன்றி ணைந்து  உணவு பொட்டலங்கள், குடிநீர், நீர் மோர், பானகம் ஆகிய வற்றை மக்களுக்கு விநியோகம் செய்தனர். காலை  ஒன்பது மணிக்  குத் துவங்கிய இத்தொண்டு  பிற் பகல் மூன்று மணி வரை நீடித்தது.  இது குறித்து  சமூக ஆர்வலருமான  செ.பிரகாஷ் கூறுகையில், “ 25   ஆண்டுகளாக இந்நிறுவனம் நடத்தும்  இம்மத நல்லிணக்க மக்கள்  ஒற்றுமை திருத்தொண்டு  பல மாவட்  டங்களில் இருந்து விழாவை காண  வந்திருந்த அனைவரையும் கவர்ந்துள்ளது” என்றார்.