districts

img

தகுதியான இடத்தில் கடைகளை ஒதுக்க வேண்டும் சாலையோர வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

திருவள்ளூர், மார்ச் 20- கும்மிடிப்பூண்டி பஜாரிலுள்ள சாலை யோர சிறு கடை வியாபாரிகளுக்கு தகுதி யான இடத்தில் கடைகளை ஒதுக்க வேண்டும் வலியுறுத்தி பேரூராட்சி செயல் அலு வலரிடம்  சாலையோர வியாபாரிகள் சங்கத்தி னர் திங்களன்று (மார்ச் 20) மனு அளித்தனர். அதன் விவரம் வருமாறு:- திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டி பஜாரில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக 200க்கும் மேற்பட்டவர்கள்  சாலை யோரத்தில் சிறு கடைகளை வைத்து தங்கள் பிழைப்பை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சில நேரங்களில் பேரூராட்சி நிர்வாகம் திடீரென கடைகளை வலுகட்டாயமாக அகற்றி வருகிறது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கிறது.  தகுதியான மாற்றுஇடம் வழங்கவேண்டும் என்பது அவர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருக்கிறது. வெண்டிங் கமிட்டி அமைத்திடுக கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் செயல் அலுவலர் தலைமையில் காவல்துறையினர், வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள், சுகாதார துறையினர், குடியிருப்போர் நலச்சங்கம் நிர்வாகிகள், சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் ஆகியோரை கொண்ட வெண்டிங் கமிட்டி அமைக்கவேண்டும், அந்த கமிட்டி இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கூட்டத்தை நடத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன், பகுதித் தலைவர் வி.ஜோசப், செயலாளர் வி.குப்பன், பொரு ளாளர் லோகிதாசன் ஆகியோர் மனு அளித்துள்ளனர்.