திருவள்ளூர், ஜூன் 20- நள்ளிரவு பூஜைக்கு சென்ற கல்லூரி மாணவியை வன்புணர்வு செய்து தற்கொலைக்கு தூண்டியது சிபி-சிஐடி விசாரணையில் அம்பல மானதை அடுத்து சாமியார் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த செம்பேடு பகுதியைச் சேர்ந்த ஹேமமாலினி (வயது 20) கல்லூரி மாணவி அவருடைய உறவினருக்கு உடல் நிலை சரியில்லாததால் சில மாதங்களுக்கு முன்பு அவருடைய பெற்றோர்களுடன் பூண்டியை அடுத்த வெள்ளத்துக்கோட்டையில் உள்ள ஆசிரமத்திற்கு சென்றார். இந்நிலையில் அவருடைய கையை பார்த்த சாமியார், நாகதோ ஷம் இருப்பதாக கூறி தொடர்ந்து வாரத்திற்கு ஒருமுறை ஆசிரமத் திற்கு வந்து சென்றால் அதற்கான பரிகார பூஜைகள் செய்து தோஷம் நீக்கப்படும் என கூறியுள்ளார். இதை நம்பி அவருடைய பெற்றோர் கல்லூரி மாணவியை ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்தனர். கடந்த ஒரு ஆண்டாக கல்லூரி மாணவி ஆசிர மத்திற்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி நாகதோஷம் தீர்ப்பதாக நள்ளிரவு பூஜைக்கு சாமியார் முனுசாமி அந்தக் கல்லூரி மாணவியை அழைத்துள்ளார். அங்கு சென்ற மாணவி மறுநாள் மர்மமான முறையில் ஆசிரமத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மாணவி யின் சாவிற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றன.
மேலும் ஹேமமாலினி பெற்றோர் பென்னலூர்பேட்டை காவல் நிலையத்தில் தனது மகள் இறப்பில் மர்மம் இருப்பதாக புகார் அளித்திருந்தனர். இந்தநிலையில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சாமியார் மற்றும் மாணவியின் குடும்பத்திடம் விசாரணை நடத்தினர். உள்ளூர் காவல்துறையி னர் விசாரணை நடத்தி னால் நியாயம் கிடைக் காது எனக்கூறி இந்த சம்பவத்தை சிபிஐ அல்லது சிபி-சிஐடி விசாரிக்க வேண்டும் என மாதர் சங்கத்தினர் வலியுறுத்தியதை அடுத்து சிபி-சிஐடி விசாரணை மேற் கொள்ள மார்ச் 26 ஆம் தேதி காவல் துறை தலைமை இயக்குநர், உத்தர விட்டார். கடந்த இரண்டு மாதங்களாக சிபி- சிஐடி போலீசார் நடத்திய விசார ணையில் கல்லூரி மாணவிக்கு நாக தோஷம் இருப்பதாக பெற்றோரிடம் பொய் சொல்லி நள்ளிரவு பூஜைக்கு ஆசிரமத்திற்கு வரச்சொல்லி அந்த பெண்ணிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடு பட்டது தெரியவந்தது. இதனால் அந்த பெண்ணை சாமியார் தற்கொலை க்கு தூண்டியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சாமியார் முனு சாமியை குற்றப்புலனாய்வு போலீ சார் ஞாயிறன்று (ஜூன் 19) கைது செய்து புழல் சிறையில் அடைத்த னர். இந்த சாமியார் மேலும் பல பெண்களை இப்படி சீரழித்து விட்ட தாகவும் அவர்கள் உண்மையை வெளியில் சொல்லாமல் இருக்க நரபலி கொடுத்திருக்கலாம் என்றும் பொதுமக்கள் பலர் தெரிவித்த னர். இதுகுறித்தும் சிபி-சிஐடி காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் என்று மாதர் சங்க திருவள்ளூர் மாவட்ட செயலாளர் இ.மோகனா தெரிவித்தார். நரபலி கொடுப்பதும் சில பெண்களை சூனியம் வைத்து விடுவேன் என மிரட்டி பல பெரிய அதிகாரிகளுக்கு இந்த சாமியார் இரையாக்கியதாகவும் கூறப்படுகிறது.