ஆர்.கே.பேட்டை,நவ.20 திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அம்மையார் குப்பம், வங்கனூர் கிளை நூலகம் மற்றும் பாலர் பூங்கா அமைப்பு சார்பில் 55வது தேசிய நூலக வார நிறைவு விழாவும், குழந்தைகள் தின விழாவும் ஞாயிறன்று நடைபெற்றது. இவ்விழாவில் மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை , கவிதை , பேச்சுப்போட்டி, மற்றும் ஓவியம் வரைதல் ஆகிய நான்கு வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் ஆர்.கே பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த சுமார் 400 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பாலர் பூங்கா நிர்வாகிகள் கிருஷ்ணன், பழனி, லதா உட்பட்ட ஆசிரிய பெருமக்கள் பள்ளி மாணவ மாணவியர்கள் நூலக வாசகர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.