districts

img

6 வழிச்சாலைத் திட்டத்தை விளைநிலங்கள் வழியாக அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

திருவள்ளூர், ஜூலை 8-  அதானி துறைமுக வசதிக்காக தச்சூர் முதல் சித்தூர் வரையிலான 6 வழிச் சாலை திட்டத்த்தினை விளைநிலங்கள் வழியே செயல்படுத்த விவசாயி கள் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். இதனால் பெரிய பாளையம் அருகே சாலைப் பணிகளுக்காக அலு வலகம் அமைக்கும் பணி களை அவர்கள் தடுத்து நிறுத்தினர்.  தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக ஆந்திரா மாநிலம் சித்தூர் முதல் தச்சூர் வரையில் சென்னை அருகே உள்ள காட்டுப் பள்ளி அதானி துறைமுகம் இணைக்கும் வகையில் ஆறு வழிச்சாலை திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் பள்ளிப் பட்டு மற்றும் ஊத்துக் கோட்டை தாலுகாவில் உள்ள 34 கிராமங்கள் வழி யாக 116 கிலோ  தொலை வில் 1238 ஏக்கர் முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்கள் வழியாக செல்வதற்கு எதிர்ப்பு தெரி வித்து பல்வேறு கட்டங்க ளாக விவசாயிகள் போராட் டத்தை முன்னெடுத்து வரு கின்றனர். இந்நிலையில்  பெரிய பாளையம் அருகே வட மதுரை பகுதியில் 6 வழிச்சாலை பணிகளுக் காக அலுவலகம் அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றன. இதனை யடுத்து விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் சாலை பணிகளுக்காக அலு வலகம் அமைக்கப்படும் இடத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். விவசாயிகள் வாழ்வா தாரத்தை பாதிக்கும் வகை யில் சாலை பணிகளை மேற்கொள்ளும் நெடுஞ் சாலை ஆணையத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதனிடையே முற்றுகை போராட்டம் நடத்திய விவசாயிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினர் பணி கள் மேற்கொண்டு நடை பெறாது என உறுதிய ளித்ததையடுத்து விவ சாயிகள் கலைந்து சென்ற னர். போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜி.சம்பத் தலைமை தாங்கினார்.இதில் மாவட்ட துணைத் தலைவர் பி.ரவி, நஞ்சை நில விவசாயிகள் சங்க தலை வர் ஜெயக்குமார், செய லாளர் சசிகுமார், பொருளா ளர் குணசேகர் உள்ளிட்ட  விவசாயிகள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.