திருவள்ளூர், பிப்.8 - தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் கவனக் குறைவால் செவ்வாயன்று (பிப்.8) விபத்து ஏற்பட்டது. பொன்னேரி நகராட்சி தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான வேட்பு மனுக்கள் பெறப் பட்டு, பரிசீலனை மற்றும் திரும்ப பெறுதல், சின்னம் ஒதுக்குதல் உள்ளிட்ட பணிகள் முடிவடைந் துள்ளன. இந்நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் செவ் வாயன்று (பிப்.8) பொன்னேரி நகராட்சி அலுவ லகம் அருகே பரிசோத னையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பறக்கும் படை யினர் வாகனம் சாலை யோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது பொன்னேரி அருகே உள்ள திருப்பாலை வனத்தைச் சேர்ந்த ராதா கிருஷ்ணனின் மனைவி சரஸ்வதி (வயது 42) என்ப வர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அச் சமயம் திடீரென பறக்கும் படையினரது வாகனத்தின் கதவு திறக்கப்பட்டது. இதனால் சரஸ்வதி கத வில் மோதி கீழே விழுந்தார். இதிலிருந்து சுதாரித்து எழுவதற்குள் அந்த வழி யாக வந்து கொண்டிருந்த டிராக்டர் சரஸ்வதி மீது மோதியது. இதனால் சரஸ்வதியின் முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை மீட்டு உடனடியாக பொன்னேரி அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்ற னர். அதன்பின் உயர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.