districts

img

புத்தக காட்சியை திருவிழாவாக கொண்டாடிய மக்கள்: ஆட்சியர்

திருவள்ளூர், ஏப் 13- திருவள்ளுர் மாவட்டத்தில் நடை பெற்ற “புத்தக திருவிழா -2022” திங்க ளன்று (ஏப்.11)   நிறைவு பெற்றது. 11  நாட்கள் நடைபெற்ற இந்த புத்தக  திருவிழாவில்  ஏராளமானோர் உற்சாகத்துடன் கலந்துகொண்டு புத்தகங்களை வாங்கிச்சென்றனர். நிறைவு விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் திரு வள்ளூர் மாவட்டம் என்பது 60 சதவிகி தம் கிராமப்புறங்களை உள்ளடக்கிய மாவட்டமாகும். இந்த நிலையிலும், புத்தக திருவிழா  வெற்றி பெற்றுள்ளது. புத்தக காட்சி தொடங்கிய நாள் முதல்  முடியும் வரை  மக்கள் அதை  திருவிழா வாக கொண்டாடினார்கள். மாவட்டத் தில் முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த  புத்தக காட்சியில் 1கோடியே 30லட்சம்   ரூபாய் மதிப்புள்ள 8 லட்சம் புத்தகங்கள்  விற்பனையானது.

வாசிப்பு பழக்கம்
25 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர் கள் பார்வையிட வைத்து, அவர்க ளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்கப் படுத்தினோம். மேலும், 1,50- லட்சம் பொதுமக்கள் பார்வையிட்டுள்ளனர். நடைபெற்ற இந்த புத்தக கண்காட்சி நிகழ்ச்சியில் நாள்தோறும் நட்சத்திர பேச்சாளர்களை கொண்டு, வாழ்க் கைக்கு தேவையான கருத்துரைகளும் வழங்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

நம்ம ஊரு நூலகம்
தனியார் துறையின் பங்களிப்புடன் நூலகங்களை பராமரிக்கும் திட்டத்தின்  கீழ் “நம்ம ஊரு நம்ம நூலகம்”  என்ற இலட்சினை (லோகோ) வெளியிடப்படடது. குழந்தைகளி டையே புத்தகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையிலும், அடுதத புத்தக காட்சியில் புத்தகங்களை வாங்குவதற்கு தேவையான தொகையினை சேமிப்பதற்காகவும் “எங்கள் உண்டியல் எங்க புத்தகம்;” என்ற இலட்சினையை (லோகோ) மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார், முன்னிலையில் வெளியிட்டார். “எங்கள் உண்டியல் எங்க புத்தகம்;” என்ற திட்டத்தினை துவங்கி வைக்கும் விதமாக 10 குழந்தைகளுக்கு, உண்டி யல்களை வழங்கினார். நிறைவு நாளில் “சுவாசிக்காவிட்டா லும் வாசியுங்கள்” என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத், உயிர்த்தமிழ்;” என்ற தலைப்பில் பாடலாசிரியர் பாவலர் அறிவுமதி ஆகியோர் பேசினர். திருவள்ளுர் மாவட்ட சார் ஆட்சியர் (பயிற்சி) மகாபாரதி, மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர் ப.அ.ஆறுமு கம், ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறை  செயற்பொறியாளர் வி.ராஜவேல்,  டி.ஜெ.எஸ். கல்வி குழும இயக்குநர் டி.ஜெ.ஜி.தமிழரசன், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்க துணைத் தலைவர்  மயிலவேலன், சங்க செயலாளர் எஸ்.கே.முருகன், பொருளாளர் ஏ.குமரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாபு, உள்பட பலர்கலந்து கொண்டனர்.