திருப்பூர், ஜூன் 15 – நகர்ப்புற வறுமை என்பது வளர்ச்சிக்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது என்று நக ராட்சிகள் நிர்வாக இயக்குநர் பா. பொன்னையா கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில், காங்கேயம், தாராபுரம், உடுமலை நகராட் சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர் வாகத் துறையின் மூலம் மேற்கொள்ளப் பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணி களை நகராட்சி நிர்வாக இயக்குநர் பா. பொன்னையா புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அவர் கூறியதா வது: தமிழ்நாட்டில் 48.45 சதவிகிதம் மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்வதால் தமிழ்நாடு மிகுந்த நகர்மயமான மாநிலமாகத் திகழ்கி றது. தமிழ்நாட்டின் 7.21 கோடி மக்கள்தொ கையில் 3.50 கோடி மக்கள் தற்போது நகர்ப்பு றங்களில் வசிக்கின்றனர். வேகமான நகர்மயமாக்கல் பெரும் பொருளாதாரத் தேவைகளையும், அதேசம யம் பெரும் வாய்ப்புகளையும் உருவாக்கி யுள்ளது. சமூகத்தின் அனைத்து பிரிவினரை யும், பொருளாதார ரீதியான வாய்ப்புகள் சென்றடைய நகர்ப்புற பகுதிகளில் நிலை யான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்ப டுத்துதல் அவசியமாகும். மாநிலத்தின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்துவதும், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதும், நக ராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கடமையாகும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், உள் ளாட்சிகளை ஆளும்திறன் கொண்ட தன்னி றைவு பெற்ற நிறுவனங்களாக மேம்படுத் துவதே இந்த அரசின் நோக்கமாகும். நகர்ப் புற ஆளுமையை நன்கு வழி நடத்த சிறந்த பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் தேவை என்பதை இந்த அரசு உணர்ந்துள்ளது. நகர்ப்புற வறுமையானது வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. அரசு தற் போது பல்வேறு கொள்கைகளை வகுத்து மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல, பல்வேறு உள்கட்ட மைப்பு வளர்ச்சிகள் மேற்கொள்வது உட்பட பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகி றது என்று அவர் தெரிவித்தார்.