பல நூறு ஆண்டுகள் மக்கள் வாழ்க்கையை சித்தரங்கள் கொண்ட பழமையான கற்கோவிலை புனரமைத்து பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோட்டமங்கலம் கிராமத்தில் பல நூறு ஆண்டு பழமைவாய்ந்த வல்லக்கொண்ட நாதசுவாமி கோவில் உள்ளது. கொழுமம் தாண்டவேஸ்ரர் திருக்கோவில் அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் உள்ள இக்கோவில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவிலும் அதன் அருகில் சுமார் ஐம்பது சென்ட் இடத்தில் மக்கள் வாழ்க்கையை சிலை வடிவில் கொண்ட வீரக்கல் வைக்கபட்டுவுள்ளது. மேலும் கோவில் பராமரிப்பு செய்ய சுமார் 90 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
பல நூறு ஆண்டுகளுக்கு பாரம்பரியம் மிக்க இக்கோவிலை முறையாக பராமரிப்பு இல்லாமல் போனதால் சிதலமடைந்து காணப்படுகிறது. மேலும் பழைய வாழ்க்கை முறையை குறிக்கும் வகையில் வீரக்கல் அமைந்துள்ள பகுதியை பாதுகாப்பு ஏதும் இல்லாமல் அங்கு உள்ள சிலைகளை சேதமடைந்தும் உள்ளது.
இந்த வீரக்கல்லில் இப்பகுதியில் வாழ்ந்த நாயக்கர் வாழ்வியல் முறைகளையும் இங்கு நடைபெற்ற போர், விவசாயம், ஆட்சி முறைகளை சிலையாக வடித்து சுமார் மூன்று மீட்டர் உயரத்தில் வீரக்கல் அமைத்துள்ளது. மேலும் பெண்களுக்கு அவர்களின் ஆட்சியில் போர் பயிற்சி மற்றும் ஆட்சிகளில் முக்கிய பங்குகள் குறித்த சிலைகளும் உள்ளது.
இது போன்ற இப்பகுதி மக்களின் வாழ்க்கை முறையை சொல்லும் இது போன்ற கட்டிடங்களை பாதுகாக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது ஆச்சரியப்படும் வகையில் உள்ளது.
இப்பகுதி மக்களிடம் இக்கோவில் குறித்த கேட்ட போது, இப்பகுதியை ஆட்சி செய்த நாயக்கர்கள் கட்டிய இந்த கோவில் மற்றும் அவர்களின் ஆட்சி முறைகளை செல்லும் வீரகல்களை பாதுகாக்க கோவிலை புனரமைத்து சுற்றியும் வேலி அமைக்க வேண்டும் என்றார்கள்.
அறநிலை துறை அதிகாரி பாவனியிடம் கேட்ட போது பழமைவாய்ந்த கோட்டமங்கலம் வல்லக்கொண்ட நாதசுவாமி கோவில் திருப்பணி செய்ய அறநிலைய துறைக்கு கருத்துரு அனுப்பட்டு உள்ளது. இந்த வாரத்தில் கோவில் திருப்பணிகள் மற்றும் வீரக்கல் உள்ள பகுதியையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கபடும் என்றார்.
மக்கள் வாழ்வியல் முறைகளை இன்றைய தலைமுறையும் அறியும் வகையில் இது போன்ற பழமையான கட்டிடங்கள் மற்றும் நினைவு சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.