திருநெல்வேலி, பிப்.3- நாட்டுப்புறக் கலைஞர் தங்க ராஜ் பெண் வேடம் பூண்டு கோவில் திருவிழா மற்றும் மக்கள் திரளாக பங்கேற்கும் திருவிழாக்களில் கால் சலங்கை கட்டி பெண் நளினத் தோடு உற்சாகத்துடன் ஆடி எல்லோ ரையும் மகிழ்வித்தவர். நிகழ்ச்சிகள் இல்லா நேரங்க ளில் தன்னுடைய வாழ்வாதாரத்திற் காக தற்போது வரை பாளையங் கோட்டை மார்க்கெட், வண்ணா ரப்பேட்டை பகுதியில் வெள்ளரிக் காய் வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி வந்தார். இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக் கத்தில் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தில் கதைநாயகனின் தந்தையாக நடித்தார். இதனால் வெளி உலகிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது தங்கராஜ், வண்ணாரப் பேட்டை காவேரி மருத்துவமனை அருகில் இளங்கோ நகரில் மனைவி, மகளுடன் வசித்து வந்தார். இவருடைய மண் வீடு ஓலை குடிசை பலத்த மழை கார ணமாக வீடு இடிந்த நிலையில் மழை தண்ணீரை தடுக்க பிளாஸ்டிக் பேப்பரால் மூடப்பட்ட குடிசையில் வாழ்ந்து வந்தார்.
தமுஎகச முயற்சியால் வீடு
அவருக்கு தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர் கள் சங்கம் சார்பில் “நாட்டுப்புறக் கலைச்சுடர்” விருது அறிவிக்கப் பட்டது. இதனை தெரிவிக்க சென்ற தமுஎகச மாநிலத் தலைவர் நாறும்பூ நாதன் இந்நிலையை அறிந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார். ஒன்றிய அரசு வீடுகட்டும் நிதி மற்றும் தமுஎகச உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் நிதி உதவியுடன் வீடு கட்டப்பட்டு திறப்புவிழா நடை பெற்றது. இதில், மாவட்ட ஆட்சி யர் விஷ்ணு, இயக்குநர் மாரி செல்வராஜ், நாறும்பூநாதன், வெண் புறா,வண்ணமுத்து ஆகியோர் பங் கேற்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. வீடு கட்டுவதுதே உச்சபட்ச லட்சி யமாக இருந்த தங்கராஜ் ஓராண்டு கூட வீட்டில் முழுமையாக வாழ முடியவில்லை. கடந்த சில நாட்க ளாக உடல் நலம் குன்றி அரசு மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிப்ரவரி 3 (வெள்ளிக்கிழமை) அதிகாலை யில் அவர் உயிர் பிரிந்தது. அவரை பிரிந்து வாடும் குடும்பத் தினருக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நெல்லை மாவட்டக் குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை மாவட்டத் தலைவர் இரா.நாறும்பூநாதன், மாவட்டச் செயலாளர் ச.வண்ண முத்து,பேரா.முத்துலட்சுமி, கவிஞர் கிருஷி, சண்முகம், அருண் பாரதி, வேல் முருகன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் தெரிவித்துள் ளனர். சனிக்கிழமை காலை 11மணி யளவில் பாளையங்கோட்டையில் அவரது இறுதி நிகழ்ச்சி நடை பெறுகிறது.