பாபநாசம், ஏப். 4- பாபாநாசம் வடக்கு வீதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு பாப நாசம் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை பாபநாசம் பேரூராட்சி மன்ற உறுப் பினர்கள் பிரேம்நாத் பைரன், கீர்த்திவாசன், மற்றும் வழக்கறிஞர் சர வணன், சமூக ஆர்வலர் குமார் நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவில், “பாபநா சம்- சாலியமங்கலம் சாலையில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடையை, பாபநாசம் வடக்கு வீதியிலுள்ள மின் மயானம் அருகில், மாற்றி அமைப்பதாகத் தெரிய வருகிறது. பாபநாசம் வடக்கு வீதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ளன, அங்கு அரசு மது பானக் கடை அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்ற னர். வடக்கு வீதியில் இரட்டைப் பிள்ளையார் கோவில், மற்றும் ஆஞ்ச நேயர் கோவில் அமைந்துள் ளது. ஸ்டேட் பாங்க், இந்தியன் வங்கி, கும்ப கோணம் மத்திய கூட்டு றவு வங்கி, கூட்டுறவு அங்காடி, ஷேக்ஸ்பியர் தொடக்கப் பள்ளி அமைந் துள்ளது. இதன் பின் புறம் தான் அரசு மது பானக் கடை கட்டப்பட்டு வருகிறது. கபிஸ்தலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து பாப நாசம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வரும் மாணவிகள், தூய் மைப் பணியாளர்கள் குடி யிருப்பு ஆகியவற்றிற்கு ஆஞ்சநேயர் கோவில் தெரு வழியாகத் தான் வந்து செல் கின்றனர். இதனால் பள்ளி செல்லும் மாணவிகளுக்கு அச்சுறுத் தல் ஏற்படும் அபாயம் உள்ளது. டாஸ்மாக் கட்டப்ப டும் இடத்தின் அருகில் மின் மயான வேலை நடை பெற்று வருகிறது. ஏற்க னவே மயானம் அங்கு உள்ளது. இதனால் இறந்தவரின் இறுதிச் சடங்கை அமைதியான முறையில் நடத்துவதில் சிரமம் ஏற்படும். மேலும் டாஸ்மாக் அருகில் குட முருட்டி ஆறு படித்துறை அமைந்துள்ளது. டாஸ்மாக் கடை அமைந்தால் அங்கு குடிப்பவர்கள் பாட்டில் களை ஆற்றுப் பகுதியில் உடைத்து வீசினால் அங்கு நிலத்தடி நீர் மாச டையும். இதனால் அங்கு குளிக்க வரும் மக்கள் மற்றும் இறுதி சடங்கைச் செய்ய வரும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஆட்சியர், மேற்படி இடத்தை நேரில் ஆய்வு செய்து உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டு மென தெரிவித்துள்ள னர்”.