districts

நெல்லை சந்திப்பில் திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்

திருநெல்வேலி,அக். 25- நெல்லை சந்திப்பு கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (65). இவர் ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டும் தொழிலை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறார். தினமும் இரவு தூங்க செல்லும் போது வீட்டு முன்பு வாக னத்தை நிறுத்திவிட்டு செல்வது வழக்கம். செவ் வாய்க்கிழமை காலையில் எழுந்த முருகன் தனது வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்பு லன்ஸ் வாகனத்தை துடை த்து கழுவி விட்டு டீ குடிக்க அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.  சிறிது நேரத்தில் அந்த வழியாக சென்றவர்கள் முருகனிடம் ஆம்புலன்சில் இருந்து புகை வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர் அங்கு ஓடி வந்தார். ஆனால் அதற்குள் ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிந்தது.உடனடி யாக பாளை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 2 வாக னங்களில் வந்த தீயணைப்பு துறையினர் ஆம்புலன்சில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் ஆம்புலன்சின் பெரும்பகுதி எரிந்து விட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை சந் திப்பு காவல்நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.  மர்ம நபர்கள் வாகனத் திற்கு தீ வைத்திருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் முருகன் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். இத னால் ஆம்புலன்சில் தீப்பற்றி யது விபத்தா? அல்லது மர்ம  நபர்கள் யாரேனும் தீ வைத்த னரா? என்ற கோணத்தில் தடய அறிவியல் துறை நிபு ணர்கள் உதவியுடன் விசார ணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத் தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.