districts

img

ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கும்பகோணம்,மார்ச் 30- தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியம் கீழ நம்பிய புரம் இந்து உதவி பெறும் துவக்கப் பள்ளியில் ஆசிரி யர் பெற்றோர்களால் தாக்கப் பட்ட சம்பவத்தை கண்டித் தும் ஆசிரியர்கள் அரசு ஊழி யர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்ற வேண் டும் என வலியுறுத்தி கும்பகோ ணம் காந்தி பூங்கா அருகே  ஆசிரியர்கள், அரசு ஊழியர் கள் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ ஜியோ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கும்ப கோணம் ஒருங்கிணைப்பா ளர் கோ.முருகன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் வெங்கடேசன், தங்கராஜ், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழ்மணி, கலை ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.