districts

தஞ்சை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிகப் பணி வாய்ப்பு

 தஞ்சாவூர், பிப்.27 - தஞ்சாவூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கட்டுப்பாட் டின் கீழ் செயல்பட்டு வரும், ஒருங்கிணைந்த சேவை மையத் தில் வழக்கு பணியாளர்-1 (இரு பணியிடங்கள்) வழக்கு பணி யாளர்-2 (இரு பணியிடங்கள்), பாதுகாவலர் (1 பணியிடம்),  பல்நோக்கு உதவியாளர் (1 பணியிடம்) பணிக்கு ஒப்பந்த  அடிப்படையில் தொகுப்பூதியத்தில், முற்றிலும் தற்காலிக மாக பணிபுரிய தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதி  வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.  வழக்கு பணியாளர்களுக்கு ஒப்பந்த ஊதியம் மாதம் 15  ஆயிரம், பாதுகாவலருக்கு மாதம் ரூ.10 ஆயிரம், பல்நோக்கு  உதவியாளருக்கு மாதம் ரூ.6 ஆயிரத்து 400 வழங்கப்படும்.  தகுதிகள் 30 வயதுக்குட்பட்டவர்களாகவும், MSW படித்தவர்களா கவும் இருக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் வசிப்பவ ராகவும், 24X7 மணி நேரமும், உதவி எண்களில் இருந்து வரும்  அழைப்புகளுக்கு சேவை செய்யும் மனப்பான்மை உடையவ ராகவும், மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவராக வும், மையத்தில் தங்கி பணிபுரியும் மனப்பான்மை உடைய வராகவும் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பம் மற்றும்  தகவல்களை தஞ்சாவூர் மாவட்ட www.thanjavur.nic.in  என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க லாம்.  மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, மாவட்ட சமூக நல அலுவலர், அறை எண்.303, மூன்றாவது தளம்,  மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தஞ்சாவூர் என்ற முகவரிக்கு  15.3.22 மாலை 5:30-க்குள் அனுப்பி வைக்க வேண்டும். தாமத மாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என  மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள் ளார்.