தஞ்சாவூர், மார்ச் 1 - உக்ரைனில் குகை அறைகளில் சிக்கி யுள்ள தஞ்சாவூரை சேர்ந்த மாணவிகள் வீடியோ ஒன்றை வெளியிட்டு, தங்களை இந்திய அரசு விரைந்து மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரத்தநாடு ஆஷா, தஞ்சாவூர் மார்ஷெ லின், பிரபாவதி உள்ளிட்ட 9 மாணவிகள் பெற்றோருக்கு அனுப்பி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது: “உக்ரைனில் ஜபோரிஷியாவில் முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறோம். தற்போது இங்கு போர் நடைபெறுவதால், குகை அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளோம். நாங்கள் கடந்த நான்கு நாட்களாக குகையில் தான் இருந்து வருகிறோம். இங்கு மிகவும் மோசமாக இருக்கு, காற்று இல்லாததால் மூச்சுகூட விட முடிய வில்லை. இதனால் மூச்சுத் திணறல் வரும் வாய்ப்புகூட இருக்கு, இது எங்க ளுக்கு பயமாக உள்ளது. இங்கு குகை யில் தங்க வேண்டிய அளவை தாண்டி நிறைய பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாங்கள் தங்கியுள்ள குகையில் உணவு, தண்ணீர் இல்லை. பெண்களா கிய எங்களுக்கு கழிப்பறை செல்வது கூட சிரமமாக இருக்கிறது. எங்களை வழிநடத்தி வெளியே கொண்டு வர யாரும் இல்லை. குண்டுகளின் சத்தம் கேட்கும் போதெல்லாம் இதயத் துடிப்பே நின்று விடும் போல இருக்கிறது. ஒவ்வொரு முறையும் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கும் போது, அடுத்தமுறை நாமும் உயிருடன் இருப்போமா என தெரி யாமல் பயத்துடன் தவித்து வருகிறோம். பலமுறை விமானத்துக்கு முன்பதிவு செய்து, அது ரத்தாகி விட்டதால் இந்தி யாவுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறோம். ஆனால், இந்தியர்கள் பலரும் ஊருக்கு செல்வதாக செய்திகள் வருகிறது. ஆனால், எங்களுக்கு எந்த தகவலும் வெளியுறவு துறையில் இருந்து வரவும் இல்லை. ஜபோரிஷியாவில் இருந்து 24 மணி நேரம் பயணம் செய்தால்தான் உக்ரைன் எல்லையை அடைய முடியும். ஆனால் ஜபோரிஷியாவில் இருந்து மால்டோவா 500 கி.மீ. தூரத்தில் உள்ளது. எனவே, அந்த பகுதிக்கு செல்ல இந்திய அரசு அந்த நாட்டில் அனுமதி பெற வேண்டும். இதுதான் ஒரே தீர்வு. எங்களை எப்படி யாவது காப்பாற்ற இந்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.