districts

img

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு எழுதுபொருட்கள் வழங்கல்

தஞ்சாவூர், மார்ச் 6- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ரெஜினா புக் சென்டர் மற்றும் ஸ்டேஷனரி விற்பனைக் கடை சார்பில், 10,11, 12 ஆம்  வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளுக்கு எழுதுபொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.  நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தலைமை வகித்தார். புத்தகக்கடை உரிமையாளர் ரபீக் முக மது கலந்து கொண்டு, 800 மாணவிகளுக்கு பேனா,  பென்சில், ஸ்கேல், ரப்பர் உள்ளிட்ட எழுது பொருட்களை வழங்கினார்.  நிகழ்ச்சியில், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கார்த்தி கேயன், ஆசிரியர்கள் செல்வராஜ், முரளி, புத்தக நிறு வனம் சார்பில் உமர், மஸ்தான், பேரூராட்சி கவுன்சிலர் முருகேசன் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.