districts

காணாமல் போன வாய்க்காலை கண்டுபிடித்து தரக் கோரிக்கை

தஞ்சாவூர், மே 25-  சமாதானப் பேச்சு வார்த்தையில் ஒப்புக்கொண் டபடி காணாமல் போன வாய்க்காலை கண்டுபிடித்து தர வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்  தஞ்சை வருவாய் கோட்டாட் சியரிடம் மனு அளிக்கப்பட்டது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் அளித்த  மனுவில், “தஞ்சாவூர்  தாலுகா, சூரக்கோட்டை  ஊராட்சி கீழவஸ்தாச்சாவடி யில், கல்லணைக் கால்வா யில் இருந்து பிரியும் சவுக்கு  குமிழி வாய்க்கால் ஆக்கிர மிப்புகளால் காணவில்லை. எனவே, இதனை கண்டு பிடித்து தரக்கோரி கடந்த  ஆண்டு 17.7.2021 காத்திருப்பு  போராட்டம் விவசாயிகளால் அறிவிக்கப்பட்டது. இதை யடுத்து, தஞ்சாவூர் வட்டாட் சியர் முன்னிலையில், 15.7. 2021 அன்று நடைபெற்ற சமா தானப் பேச்சுவார்த்தையில், 21.7.2021 ஆம் தேதிக்குள்  வாய்க்காலை கண்டு பிடித்து, அளவீடு செய்து  வாய்க்கால் மீட்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.  ஆனால், பெயரளவுக்கு சில ஆக்கிரமிப்புகள் மட்டுமே அகற்றப்பட்டு, இன்னும் ஒரு  பகுதி மூடப்பட்ட நிலை யிலேயே உள்ளது. இது அப்பகுதி விவசாயிகள், பொதுமக்களை ஏமாற்றுவ தாகவே உள்ளது. எனவே, இந்தக் கோரிக்கை மீது  கவனம் செலுத்தி, உடனே நட வடிக்கை எடுத்து வாய்க்காலை தூர் வாரிட நட வடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. 

கண்டமங்கலம் தலைப்பு வாய்க்கால்
பூதலூர் வட்டம், மைக் கேல்பட்டி கிராம மக்கள் சார்பில், மைக்கேல்பட்டி, கண்டமங்கலம் தலைப்பு வாய்க்காலை தூர்வாரி, ஆக்கிரமிப்பை அகற்றி தரு மாறு, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியரிடம் சி.குமார்  கோரிக்கை மனு அளித்துள் ளார்.  அம்மனுவில், “மைக் கேல்பட்டி மற்றும் கண்ட மங்கலம் பிரிவு வாய்க்கால்  குடமுருட்டி ஆற்றிலிருந்து வருகிறது. இந்த வாய்க்கால், கடந்த 25 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. அப்பகுதியில் பல்வேறு இடங்களில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி வடிகால் இல்லா மல் மக்கள் அவதிப்படுகிறார் கள். இந்த பகுதி விவசாயி களையும் விவசாயத்தையும் காப்பாற்றிட ஆக்கிரமிப்பு களை அகற்றி தூர்வாரி தரு மாறு கேட்டுக் கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.