தஞ்சாவூர், மார்ச் 31 - தஞ்சாவூரில் தூய்மைப் பணியாளர் களுக்கு 20 ஏக்கரில் அடுக்குமாடி குடியி ருப்புகளுடன் அனைத்து வசதிகள் அடங்கிய கனவு நகரம் அமைக்கப்ப டும் என மாநகராட்சியின் மாமன்ற கூட்டத் தில் மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார். தஞ்சாவூர் மாமன்ற உறுப்பினர் களாக பொறுப்பேற்றுதும், முதல் மாமன்ற கூட்டம் புதன்கிழமை நடை பெற்றது. கூட்டத்துக்கு மேயர் சண்.ராம நாதன் தலைமை வகித்தார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் க.சர வணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் பலரும் பேசுகையில், காமராஜர் காய்கறி சந்தை யில் முன்பு வியாபாரம் செய்தவர்க ளுக்கு மீண்டும் கடை வழங்க முன்னு ரிமை கொடுக்க வேண்டும். மாநகரில் பல இடங்களில் கொசுத் தொல்லை அதிக மாக உள்ளதை தடுக்க வேண்டும். பல இடங்களில் குடிநீரும், கழிவுநீரும் சேர்ந்து வருவதால் பொதுமக்கள் பாதிக் கப்படுகின்றனர். இதனை சீரமைக்க வேண்டும். கடந்த ஆட்சியில் கொண்டு வரப் பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி பணி களை செய்ய உள்ளூர் ஒப்பந்தகாரர்க ளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை முன்வைத்து அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் பேசினர்.
இதையடுத்து மேயர் சண்.ராமநா தன் பேசுகையில், “கடந்த ஆட்சியில் மாநகராட்சியின் மூலம் ஏலம் விடப்பட்ட கடைகள் தொடர்பாக பல முறைகேடு கள் நடைபெற்றுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்ற முறை கேடுகள் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட உள்ளது. தினமும் ஒரு வார்டுக்கு மேயர், ஆணையர் மற்றும் அதிகாரிகள் சென்று காலை 7 மணி முதல் 9 மணி வரை அங்குள்ள பொதுநல அமைப்புகள், பொதுமக்களை சந்தித்து குறைகள் இருந்தால் அதை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 6 மாதங்களாக தூய்மைப் பணி யாளர்கள் இல்லாமல் சிரமப்பட்டு வந்த நிலையில் தற்போது 250 தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் சீனிவாசபுரத்தில் 20 ஏக்கரில் இருந்த குப்பை கிடங்கில் குப்பைகள் தரம்பிரிக்கப்பட்டு அங்கி ருந்த குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. அந்த இடத்தில் தூய்மைப் பணியா ளர்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு ‘கனவு நகரம்’ என்ற பெயரில் அமைக்கப்பட வுள்ளது. தற்போது இந்த கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட 88 தீ்ர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன” என்றார்.