தஞ்சாவூர், மார்ச் 7- தமிழ்நாட்டில் முதல் முறையாக 1,212 கர்ப்பிணி பெண்கள் பயனடையும் விதத்தில், தாய்-சேய் நல கண்காணிப்பு மையத்தை துவக்கியதற்கு தஞ்சாவூர் மாநகராட்சியை திரைப்பட இயக்குநரும், நடிகருமான சசிகுமார் பாராட்டினார். தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அமல் படுத்தி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற் கொண்டு வருகிறது. இந்த நிலையில் மார்ச் 3-ஆம் தேதி தமிழ்நாட்டி லேயே தஞ்சாவூர் மாநக ராட்சி சார்பில் முதல்முறை யாக 1,212 கர்ப்பிணிப் பெண் களுக்கு பாதுகாப்புடனும், இறப்பில்லா கர்ப்பிணிகள் என்ற இலக்கை அடையும் நோக்கில், மாநகராட்சி அலு வலகத்தில் தாய் சேய் நலக் கண்காணிப்பு மையம் தொடங்கப்பட்டது. இதைய றிந்த திரைப்பட இயக்குந ரும் நடிகருமான சசிகுமார் திங்கள்கிழமை தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத் துக்கு வந்திருந்தார். அவரை மாநகராட்சி மேயர் சண்.ராம நாதன், துணைமேயர் அஞ்சு கம் பூபதி, ஆணையர் க.சர வணகுமார் ஆகியோர் வர வேற்றனர். பின்னர் தாய் சேய் கண்காணிப்பு மையத்தை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய சசிகுமார், தஞ்சாவூருக்கு வேறொரு நிகழ்வுக்காக வந்த நான், தஞ்சாவூர் மாநகராட்சியின் செயல்பாடுகளை அறிந்து பாராட்ட வேண்டும் என்ப தற்காக மாநகராட்சி அலுவ லகம் வந்தேன். கர்ப்பிணிப் பெண்களை பாதுகாக்கும் விதத்தில் தமிழ் நாட்டில் முதல்முறையாக தஞ்சாவூர் மாநகராட்சி எடுத்துள்ள நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசுக்கும், மாநக ராட்சி நிர்வாகத்துக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இந்நிகழ்வில் நகர்நல அலுவலர் சுபாஷ்காந்தி உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.