தஞ்சாவூர், ஜன.20- தஞ்சாவூரில் நடைபெற்ற கலைத் திருவிழா நிகழ்ச்சியில், போட்டிகள் நடத்தப்பட்டது. இந்தப் போட்டி களில் வடக்கு மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களில் வாத்திய கருவிகள் இசைக்கும் போட்டியில், மாவட்ட அளவில் எட்டாம் வகுப்பு மாணவன் சந்தோஷ் இரண்டாம் இடம் பிடித்து பரிசு பெற்றார். நகைச்சுவை வழங்குதல் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்து நிலவரசி என்ற மாணவி பரிசு பெற்றார். கதை சொல்லுதல் போட்டியில் வீரலட்சுமி என்ற மாணவி இரண்டாம் இடம் பெற்றார். அதேபோன்று கிராமிய நடன நிகழ்ச்சியில் ஜனனி சிவானி உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் இரண்டாம் பரிசு பெற்றனர். நாடகம் நடத்தும் நிகழ்ச்சியில் கவியரசன் கவி சக்தி உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினருக்கு மாவட்ட அளவில் மூன்றாம் பரிசு கிடைத்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியை ஜமீலா மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் பாராட்டினர்.