districts

img

தஞ்சை மருதுபாண்டியர் கல்லூரியில்  ரோட்ராக்ட் கிளப் தொடக்க விழா

தஞ்சாவூர், செப்.1- தஞ்சை மருதுபாண்டியர் கல்லூரியில் ரோட்டரி கிளப்  ஆப் தஞ்சாவூர் கிங்ஸ் சார்பில் ரோட்ராக்ட் கிளப் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் மருது பாண்டியன் தலைமை வகித்துப் பேசி னார். கல்லூரி முதல்வர் விஜயா, கல்வியியல் கல்லூரி முதல்வர் சுப்ரமணியன், துணை முதல்வர் தங்கராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். டிஎன்பிஎல் முதுநிலை மேலாளர் மாணிக்கவாசகம் சிறப்புரையாற்றினார்.  ரோட்டரி துணை ஆளுநர் நாராயணன், புதிய தலை வர், செயலாளர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூர் கிங்ஸ் தலைவர் டாக்டர் ரமேஷ்குமார், செயலாளர் ஸ்ரீதர், முன்னாள் தலை வர்கள் சி.டி.ராமநாதன், எஸ்.டி. ராமநாதன், பழனி யப்பன், டி.பழனியப்பன், சுந்தரநாராயணன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  மருதுபாண்டியர் கல்லூரி ரோட்ராக்ட் சங்கத் தலைவராக பேஷன் டெக்னாலாஜி துறை மாணவி யமுனா, செயலாளராக கம்யூட்டர் சயின்ஸ் துறை  மாணவர் வீரமணி ஆகியோரை ரோட்ராக்ட் ஒருங்கி ணைப்பாளர் பிரின்ஸ் அறிமுகப்படுத்தினார். மாணவி யமுனா நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி மேலா ளர் கண்ணன் செய்திருந்தார்.