districts

திருஆரூரான் சர்க்கரை ஆலை பிரச்சனைக்கு தீர்வு காண்க! ஜன.21-ல் மாநிலம் முழுவதும் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

வி.ச மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் தகவல்

தஞ்சாவூர், ஜன.18-  திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்  கரை ஆலை விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி, ஜன.21-ஆம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநி லம் முழுவதும் கோட்டாட்சியர் அலுவலகம்  முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரி வித்துள்ளது.  தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நட ராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  ‘‘தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடியி லும், கடலூர் மாவட்டம் சித்தூரிலும் உள்ள  திருஆரூரான் சர்க்கரை ஆலை, கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் அரவைப் பணிகள்  இல்லாமல் மூடிக் கிடக்கிறது. இதற்கு கார ணம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய  சுமார் ரூ.112 கோடி நிலுவைத் தொகையை  கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வரு கின்றனர்.  மேலும், சுமார் 6 ஆயிரம் விவசாயிகள் பெயரில் மோசடியாக, ரூ.300 கோடி அள விற்கு 12 வங்கிகளில் ஆலை நிர்வாகம்  கடனை பெற்றுள்ளது. இதன் மூலம், விவ சாயிகளை கடனாளியாக மாற்றியுள்ளனர்.  இதற்கிடையில், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை யும் தரவில்லை. விவசாயிகள் பெயரில் போலியாக வாங்கிய கடனையும் ஆலை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளாமல், தேசிய நிறு வனச் சட்டத் தீர்ப்பாயத்திற்கு சென்று, இரண்டு சர்க்கரை ஆலைகளையும் பொது  ஏலத்தில் விட்டு விட்டது.  தற்போது, திருஆரூரான் சர்க்கரை ஆலையை, கால்ஸ் என்ற புதிய நிர்வாகம்  ஏலத்தில் எடுத்துள்ளது. அந்த புதிய நிர்வா கம், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, விவசாயிகள் பெய ரில் பெற்ற கடன் தொடர்பாக பேசாமல், ஆலையைத் திறக்க முயற்சித்தனர்.

இதையடுத்து நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், விவசாயிகள் பெயரில்  போலியாக வங்கியில், வாங்கிய கடன்  தொகையை புதிய நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கடந்த 50 நாட்களாக திருமண்டங்குடி ஆலை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து முதல்வரையும், வேளாண் துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து,  விவசாயிகளின் நியாயமான கோரிக்கை களை ஏற்று தீர்வு காண வேண்டும் என  கூறியுள்ளோம். முதல்வரிடம் முறையிட்டும்  50 நாட்களாக விவசாயிகள் பிரச்சனை தீர வில்லை. கரும்பு விவசாயிகளை கண்டு கொள்ளாத மாநில அரசை கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் ஜனவரி 21 அன்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  சார்பில் மாநிலம் முழுவதும் கோட்டாட்சி யர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடத்த உள்ளோம்.  எனவே, முதல்வர் உடனடியாக தலை யிட்டு, வட்டியுடன் நிலுவைத் தொகையை வழங்கவேண்டும். விவசாயிகள் பெயரில்  மோசடியாக வாங்கிய கடன் பிரச்சனைக்கு  தீர்வு காண வேண்டும். சர்க்கரை ஆலை யை கூட்டுறவுத் துறை மூலம் மாநில அரசே ஏற்று நடத்த வேண்டும். ஒன்றிய அரசு வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி யிலிருந்து, ரேசன் கடைகளில் செறிவூட்டப் பட்ட அரிசியை வழங்குவதாக அறி வித்துள்ளது. மாநில வேளாண்துறை அமைச்சரும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என கூறியுள்ளார். இந்நிலை யில் ரத்தசோகை, இரும்பு சத்து குறை பாடுகளை போக்குவதற்காக அரிசியை செறிவூட்டி வழங்குவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ள போதிலும், மாநில அரசு அதை முழுமையாக ஆய்வு செய்த பிறகே,  உரிய முடிவு எடுக்க வேண்டும்’’ என்றார்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், சிபிஎம் மாந கரச் செயலாளர் எம்.வடிவேலன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.