கும்பகோணம், மார்ச் 24 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ் கோவால் அங்கீகரிக்கப்பட்ட, தாராசுரம் ஐரா வதீஸ்வரர் திருக்கோயில் மற்றும் கோயில் பூங்காவிற்கு, ஓஎன்ஜிசி சமூக பொறுப்பு ணர்வு திட்டத்தின் கீழ் ரூ.13,79,000 மதிப்பீட்டில் நவீன மின்னொளி வசதி அமைக்கப்பட்டு உள்ளது. யுனெஸ்கோ நிறுவனத்தால், உலக பாரம் பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு, இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப் பாட்டில் கும்பகோணம் அருகேயுள்ள தாரா சுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயில் அமைந் துள்ளது. இக்கோயிலுக்கும் இதனை சுற்றி லும் உள்ள பூங்காவிற்கும் நவீன மின்னொளி வசதியை ரூ.13 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பீட்டில், ஓஎன்ஜிசி நிறுவனம் தனது சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் செய்துள்ளது. இதற்கான எளிய நிகழ்ச்சி கோயில் வாயிலில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் கே.சரவணன், துணை மேயர் சு.ப.தமிழழகன் ஆகியோர் தலைமையிலும் ஓஎன்ஜிசி நிறுவன மேலாளர் பெ.நா.மாறன் முன்னிலையிலும் நடைபெற்றது. கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிமி டெட் நிறுவனத் தலைவர் எஸ்.கல்யாணசுந்த ரம் சிறப்பு விருந்தனராக பங்கேற்று புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன மின் விளக்கு களை ஒளியூட்டி வைத்தார். மாநகராட்சி உறுப்பினர்கள் அசோக்குமார், சாகுல் ஹமீது, கும்பகோணம் ஒன்றியத் தலைவர் காயத்ரி அசோக்குமார், ஓஎன்ஜிசி அலுவலர்கள் கோபிநாத், சம்பத்குமார் சமூகப் பொறுப்பு ணர்வு மனிதவளம் விஜயகண்ணன் மற்றும் அலுவலர்கள், கோயில் பணியாளர்கள் உட னிருந்தனர்.