districts

img

சிஐடியு தஞ்சை மாவட்ட மாநாட்டு பேரணி

கும்பகோணம், அக்.8 - சிஐடியு தஞ்சாவூர் மாவட்ட 15 ஆவது மாநாட்டையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிஐடியு  தொழிலாளர்களும் தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து பொதுக்கூட்ட மேடைக்கு, தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும் தொழிலாளர் உரிமையை மீட்டுத் தரவும் வலியு றுத்தி முழக்கங்களுடன் பேரணியாக வந்தனர். தொழிலாளர் முழக்க பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன் துவக்கி வைத்தார். ஊர்வ லத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், அகில இந்திய துணைத் தலைவர் மாலதி சிட்டிபாபு, மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், மாவட்ட பொருளாளர் மா.கண்ணன் உட்பட தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.