districts

அஸ்-சலாம் பொறியியல் கல்லூரியில் ஏப்.10 தனியார் வேலைவாய்ப்பு முகாம் அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

கும்பகோணம், ஏப்.6 -  தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் திருமங்கலக்குடி அஸ்ஸலாம் பொறி யியல் கல்லூரியில் நடைபெற உள்ள தனியார்  துறை வேலைவாய்ப்பு முகாமிற்கான முன்னேற்பாடு பணிகளை தொழிலாளர் நலன்  மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி கணேசன், அரசு தலைமை கொறடா கோவி செழியன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர்  வீரராகவ ராவ்  மற்றும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ்  ஆலிவர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அமைச்சர் சி.வி.கணேசன் ஆய்வுக்குப் பின் கூறுகையில், தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்  மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார  இயக்கம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஏப்ரல் 10 ஆம் தேதி  அஸ்-சலாம் பொறியியல் கல்லூரி, ஆடுதுறை யில் காலை 8.30 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமானது தஞ்சாவூர் மாவட்டத் தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக் காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட  நகரங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர். இதில் 5 ஆம்  வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை  படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ,  பட்டதாரி கள், நர்சிங் மற்றும் பி.இ கல்வி தகுதிகளுக் குரிய வேலைநாடுவோருக்கு 1000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பினை அளிக்க உள்ளனர். இம்முகாமில் வேலைவாய்ப்புடன் கூடிய  இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஆள் சேர்ப்பும் நடைபெறுகிறது. வெளிநாடு களுக்கு வேலைக்கு செல்வதற்கான பதிவு மற்றும் ஆலோசனையும், சுயத்தொழில் தொடங்குவதற்கு உரிய வழிகாட்டுதல் ஆலோ சனையும் வழங்கப்பட உள்ளது.  இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான் றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றி தழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு  பயன்பெறுமாறு தெரிவித்து கொள்ளப்படு கிறது. மேலும் இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும்  வேலைநாடுநர்கள் தங்களது சுய விவரங் களை www.tnprivatejobs.tn.gov.in என்ற  இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளு மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பதிவு செய்ய இயலாதவர்கள் நேரடியாக முகாமில்  கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்து கொள்ளப்படுகிறது தெரிவித்துள்ளார்.