தஞ்சாவூர், மே 28- வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் அறுவ டைக்குப் பின் சார்பு பொருள்களை “மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் பரவலாக்கம்” திட்டத் தின் கீழ் பொதுப்பிரிவினர் மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கு 40 விழுக்காடு பின்னேற்பு மானியத்தில் கருவிகள் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் கீழ் மரவகை மற்றும் இரும்பு உருளைகளை கொண்ட எண்ணெய் பிழியும் இயந்திரங்களுக்கு அதிகபட்சமாக ரூ.94,683, தென்னைமட்டை உரிக்கும் இயந்தி ரங்களுக்கு அதிகபட்சமாக ரூ.61,600, வாழை மட்டை நார் உரிக்கும் இயந்திரங்களுக்கு ரூ.52 ஆயிரம், சிறிய வகை நெல் அரைக்கும் இயந்திரங்களுக்கு அதிகபட்சமாக ரூ.17 ஆயிரம், நெல் உமி நீக்கும் இயந்திரங்களுக்கு அதிகபட்சமாக ரூ.44 ஆயிரம், பின்னேற்பு மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படு கிறது. விவசாயிகள் இத்திட்டத்தில் பயனடைய ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், பாஸ்போர்ட் போட்டோ, சிட்டா அடங்கல், மும்முனை மின்சாதன வசதியுடன் கூடிய 10 அடி நீளம் 10 அடி அகலம் உள்ள இடம் உள்ளதற்கான ஆவணங்களுடன் விண்ணப் பிக்க வேண்டும். மேற்காணும் இயந்திரங்கள் தேவைப்ப டும் தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, பூதலூர் மற்றும் திருவோணம் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் தஞ்சாவூர் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், எண்.15, கிருஷ்ணா நகர், மனோஜிபட்டி ரோடு, மருத்துவக் கல்லூரி அஞ்சல், தஞ்சாவூர்- 613 004 என்ற முக வரியிலும். கும்பகோணம், அம்மாபேட்டை, பாப நாசம், திருவிடைமருதூர் மற்றும் திருப்ப னந்தாள் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் கும்பகோணம் உபகோட்ட உதவி செயற் பொறியாளர்(வே.பொ) அலுவலகம், தொழில் பேட்டை அருகில், திருபுவனம், திரு விடைமருதூர் தாலுகா, கும்பகோணம் - 612103 என்ற முகவரியிலும், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபா வாசத்திரம் வட்டாரங்களை சார்ந்த விவசாயி கள் பட்டுக்கோட்டை உபகோட்ட உதவி செயற் பொறியாளர்(வே.பொ) அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், பாளையம், பட்டுக்கோட்டை -614 601 என்ற முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன்பெறு மாறு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.