தஞ்சாவூர், ஜன.2- தஞ்சாவூர் அருகே காசவளநாடு கொல்லாங்கரை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகா தசி நாளன்று சரித்திர நாடகங்கள் நடத்தி வருகின்றனர். இதன்படி ஏகாதசியின் போது மூன்று நாட்களுக்கு சரித்திர நாடகங்களான இராமாயணம், வள்ளி திரு மணம், ருக்மாங்கதன், சத்தியவான் சாவித்ரி நாடகங் கள் நடத்தப்படுகின்றன. இந்த நாடகங்களுக்கு தேவை யான கதாப்பாத்திரங்களாக கிராம மக்களே நடித்து வருகின்றனர். குறிப்பாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதில் நடித்தாலும், பெண்கள் நாடகத்தில் நடிப்ப தில்லை. பெண் கதாபாத்திரங்களை ஆண்களே தேர்வு செய்து நடிக்கின்றனர். இந்நிலையில் ஜன.1 அன்று இரவு தொடங்கி ஜன.2, 3 ஆகிய நாட்களிலும் நாடகம் நடைபெறுகிறது.