தஞ்சாவூர்/குடவாசல், ஜூலை 27 - 44 ஆவது சர்வதேச சதுரங்க ஒலிம்பி யாட் போட்டி ஜோதி செவ்வாயன்று மாலை தஞ்சாவூருக்கு வந்தது. தஞ்சா வூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் துக்கு வந்த ஜோதியை, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வரவேற் றார். பின்னர் புதிய பேருந்து நிலை யம், பெரியகோயில் வழியாக தஞ்சா வூர் பழைய பேருந்து நிலையம் வந்த டைந்தது. வழிநெடுகிலும் ஒலிம்பியாட் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. பெரியகோயில் அருகே வந்த ஒலிம்பியாட் ஜோதியை மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், செஸ் வீரர்கள் அர்ஜூன்கல்யாண், ஸ்ரீஜா சேஷாத்ரி ஆகியோரிடம் வழங்கினார். பின்னர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மைதானத்தில் ஒலிம்பி யாட் ஜோதி வரவேற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் 150 கலைஞர்கள் பங்கேற்ற தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், ஒயிலாட் டம், தப்பாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில், அமைச் சர்கள் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, எஸ்.ரகுபதி, எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், தமிழ்நாடு தடகள சங்கத்தின் செயலாளர் ஜி.செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குடவாசல்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் இருந்து புறப்பட்ட 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஜோதி நன்னிலம் வழியாக குடவாசல் வந்தடைந் தது. குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தி லிருந்து ஜோதி ஓட்டம் புறப்பட்டு குட வாசல் பேருந்து நிலையம் வரை சென்று பின்னர் கொரடாச்சேரி சென்றடைந் தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகவேல், சதுரங்க ஜோதியை ஓட்டத்தை தொடக்கி வைத்தார்.