தஞ்சாவூர், ஏப்.21 - பட்டுக்கோட்டையில் ஆம்பு லன்சை நிறுத்த இடம் இல்லாமலும், ஓய்வெடுக்க வசதி இல்லாமலும், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிதாப மான நிலையில் தவித்து வருகின்ற னர். மாவட்ட நிர்வாகம் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் பொது மக்களுக்கு உதவும் வகையில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப் பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட் டையில், பொதுமக்கள் அவசரச் சேவையில் இரண்டு 108 ஆம்பு லன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளூர் பகுதிக்கும், ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் தஞ்சை செல்வதற்கும் இயக்கப்பட்டு வரு கிறது. ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு ஒரு வாகன ஓட்டுனர், ஒரு நர்ஸ் டெக்னீசியன் என இருவர் பணி யாற்றி வருகின்றனர். ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கு ஒரு ஷிப்ட் என இரண்டு வாகனங்களுக்கும், 4 ஓட்டு நர்கள், 4 நர்ஸ் டெக்னீசியன்கள் பணி யில் உள்ளனர். மேலும் வார விடு முறையில் பணியாற்றுவதற்கு ஒரு ஓட்டுநர், ஒரு செவிலியர் மாற்றுப் பணியில் உள்ளனர். பட்டுக்கோட்டை யில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் மொத்தம் 10 பேர் பணியாற்றுகின்றனர். பட்டுக்கோட்டையில் 108 ஆம்பு லன்ஸ் வாகனத்தை நிறுத்த தனியே இடமில்லாமல், பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் எதிரே உள்ள காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப் பட்டு வருகிறது.
காவல் நிலையத் திற்கு அதிகாரிகள் வருகை அல்லது ஏதேனும் கூட்டம் நடைபெறும் போது, அங்கிருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தை அப்புறப்படுத்தும்படி காவல்துறை அதிகாரிகள் தெரி வித்து விடுகின்றனர். இதனால் வாகனங்களை நிறுத்தி வைக்க இடமில்லாமல், 108 ஆம்பு லன்ஸ் ஓட்டுநர்கள் தவித்து வருகின்ற னர். மேலும், 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள், பணியில் உள்ள பெண் நர்ஸ் டெக்னீஷியன்கள் ஓய்வெடுக்க வும், கழிப்பறை செல்லவும் எவ்வித அடிப்படை வசதியும் இன்றி தவித்து வருகின்றனர். இதனால் கொளுத் தும் வெயிலிலும், வெட்டவெளி யில் வெயிலிலும், மழையிலும் நிறுத்தப்படும் ஆம்புலன்ஸ் வாகனத் திலேயே ஓய்வெடுக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் மற்ற இடங்களில் அரசு மருத்துவமனைகள், அரசு கட்டி டங்களில் 108 ஆம்புலன்ஸ் வாக னத்தை நிறுத்த அனுமதி வழங்கப் பட்டு, ஓய்வெடுக்கவும் வசதி செய் யப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை யில், முன்பு இருந்த சார் ஆட்சியர், நக ராட்சிக்கு சொந்தமான இடத்தில் (சமு தாயக் கூடம்) அனுமதி பெற்று, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஓய்வெடுக்க வசதி செய்து கொடுத்திருந்தார்.
காலப்போக்கில், தற்போது நக ராட்சி நிர்வாகத்தினர், 108 ஆம்பு லன்ஸ் ஊழியர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தி உள்ள தாக கூறப்படுகிறது. இல்லையேல் வாடகை கொடுத்து தங்கிக் கொள்ளு மாறு தெரிவித்துள்ளனர். சிபிஎம் கோரிக்கை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இது குறித்து மருத்துவத் துறையின் மாவட்ட நிர்வாகம், 108 மேல் அதிகா ரிகளிடம் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பட்டுக்கோட்டை ஒன்றி யச் செயலாளர் எஸ்.கந்தசாமி கூறு கையில், “பட்டுக்கோட்டையில், பொதுமக்களுக்கான மருத்துவ சேவை, அவசர கால பணிகளில், 108 ஆம்புலன்சில் பணியாற்றும் ஆண், பெண் ஊழியர்கள் தங்கள் ஆம்பு லன்ஸ் வாகனத்தை நிறுத்தி வைக்க வும், தாங்கள் ஓய்வெடுக்கவும், கழிப் பறைக்குச் செல்லவும் வழியில்லா மல் தவித்து வருகின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார். - எஸ்.ஜகுபர்அலி, தஞ்சாவூர்