districts

img

சேலம்: பள்ளி மாணவியை மதுகுடிக்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர் கைது!

சேலம் மாவட்டட்தில் 15 வயது சிறுமி பள்ளி சீருடையுடன் மதுபோதையில் சாலையோரம் உள்ள கடை ஒன்றில் மயங்கிய நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீட்கப்பட்டார். இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த அழகாபுரம் காவல்துறையினர், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு இருக்கலாம் எனச் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

இதுதொடர்பாக சிறுமியின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் அஸ்தம்பட்டி காவல் உதவி ஆணையாளர் அஸ்வினி மற்றும் அழகாபுரம் காவல் ஆய்வாளர் காந்திமதி ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். மேலும் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபர் இறக்கிவிட்டுச் சென்றதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து சிறுமியை இரண்டு சக்கர வாகனத்தில் அழைத்து வந்தது யார் என அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்

இந்நிலையில் இரும்புக்கடை உரிமையாளர் கோவிந்தசாமி என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். குளிர்பானத்தில் மதுபானம் கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதும், அப்போது சிறுமிக்கு வலிப்பு வந்ததால் இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து இறக்கிவிட்டுச் சென்றதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.