கந்தர்வக்கோட்டை, மார்ச் 21- ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 அன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டா டப்படுகிறது. இதன் ஒருபகுதியாக புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம் விடுதி நடுநிலைப் பள்ளி யில் உலக சிட்டுக்குருவிகள் தினம் தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கடை பிடிக்கப்பட்டது. விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரி யர் மீனாம்பாள் தலைமை வகித்தார். அறி வியல் இயக்கத்தின் மாவட்ட இணைச் செய லாளர் கு.துரையரசன், வட்டாரத் தலை வர் அ.ரகமத்துல்லா ஆகியோர் சிட்டுக்குரு விகள் தினம் குறித்துப் பேசினர். ஆசிரியர் ராதிகா வரவேற்க, ராமலெட்சுமி நன்றி கூறினார்.