புதுக்கோட்டை, ஜூலை 12 - கால்நடைகள் பராமரிப்புத் துறை மற்றும் பெண்கள் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற விழாவில் விதவைகள், கணவ ரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு 100 விழுக்காடு மானி யத்தில் 5 ஆடுகள் வழங்கும் திட்டத்தை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை தொடங்கி வைத்தார். விழாவில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் வி.ரெத்தினவேல், ஜி. பன்னீர்செல்வம், கால்நடை பராமரிப்பு வட்டார மருத்துவர் செந்தில்குமார், துணை வட்டார மருத்துவர் பிரசாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.